/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு
/
குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு
ADDED : மார் 16, 2024 01:16 AM
ஈரோடு:'பெண்
குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்'
திட்டத்தில், பஞ்சாயத்துக்களில் உள்ள சிறு கோவில் பூசாரிகள்,
அர்ச்சகர்கள் பங்கேற்ற குழந்தை திருமணம் தடுத்தல் தொடர்பான
விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோட்டில் நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலர்
சண்முகவடிவு தலைமை வகித்தார்.
உரிய வயது வந்தவர்களுக்கு
மட்டுமே திருமணத்தை நடத்த வேண்டும். குழந்தை திருமணம் மற்றும் இளம்
வயது கர்ப்பத்தை தடுக்க வேண்டும். இதுகுறித்து 1098, 181 ஆகியவற்றில்
புகார் செய்யலாம், என யோசனை தெரிவிக்கப்பட்டது. இதேபோன்ற
விழிப்புணர்வு நிகழ்ச்சி அம்மாபேட்டை, அந்தியூர், பவானிசாகர்,
நம்பியூர், டி.என்.பாளையம், கொடுமுடியில் நடந்ததாக, அதிகாரிகள்
தெரிவித்தனர்.

