/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நட்டாற்றீஸ்வரர் கோவிலில் இன்று சித்திரை பூஜை
/
நட்டாற்றீஸ்வரர் கோவிலில் இன்று சித்திரை பூஜை
ADDED : ஏப் 13, 2025 04:24 AM
ஈரோடு: நட்டாற்றீஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை விழா பூஜை இன்று மாலை துவங்குகிறது. காவிரி ஆற்றின் நடுவே மணலால் சிவலிங்க திருமேனி அமைத்து அகத்தியர் பூஜித்த தல-மான, நட்டாற்றீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்-தாண்டு தினமான சித்திரை முதல் தேதி சிறப்பு பூஜை நடக்கிறது. இந்நாளில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருவர்.
இந்நிலையில் கோவிலில் சித்திரை விழா பூஜை இன்று மாலை, 4:00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் தொடங்குகிறது. இதை-யடுத்து, 108 சங்கு ஸ்நபனம், ருத்ர பாராயணம், ருத்ர ஹோமம் த்ரவிய சமர்ப்பணம் நடக்கிறது. நாளை அதிகாலை, 3:30 மணிக்கு விநாயகர் வழிபாடு, ருத்ர பாராயண ஹோமத்தை தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் நடக்கிறது.

