நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு, 11:45 மணியளவில், தாராபுரம் புனித ஞான பிரகாசியர் ஆல-யத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில், திரளான கிறிஸ்தவர்கள் பங்-கேற்றனர். இதை தொடர்ந்து இயேசு கிறிஸ்து பிறப்பு நிகழ்வை, வட்டார தலைமை குரு ஜார்ஜ் தன்ராஜ் நடத்தி வைத்தார். தொடர்ந்து நேற்று காலை நடந்த கூட்ட திருப்பலியில், நுாற்றுக்க-ணக்கான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
வாஜ்பாய் பிறந்தநாள்தாராபுரம்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, பா.ஜ.,வினர் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே, அவரது உரு-வப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஓ.பி.சி. பிரிவு மாநில செயலாளர் ரமேஷ், திருப்பூர் மாவட்ட நிர்-வாகிகள் சுகுமார், மீனாட்சி கோவிந்தசாமி, நகர தலைவர் ரங்கநா-யகி உள்பட, 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

