ADDED : ஜன 26, 2026 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மண்டல மாநாடு சி.ஐ.டி.யு., - ஆர்.இ.டபிள்யூ.ஏ., சார்பில் ஈரோட்டில் நடந்தது. ஆர்.இ.டபிள்யூ.ஏ., ஜெகநாதன் தலைமை வகித்தார். சம்மேளன செயலாளர் நடராஜன், உதவி தலைவர் பிச்சை சிறப்புரையாற்றினர். பண்முக மேம்பாட்டு குழு தலைவர் முருகையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பா.ஜ., அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள், சம்மேளனங்கள், பிப்., 12ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்வதாக முடிவு செய்துள்ளது. அனைத்து தொழிற்சங்க முடிவு-களை அமலாக்க உறுதி ஏற்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட சில அரசாணைகள் போக்குவரத்துக்கு எதிரானது. அவற்றை ரத்து செய்து, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

