ADDED : ஜூலை 21, 2025 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி அருகே ஜம்பை, கருக்குபாளையத்தில் ஏரிக்கரை அருகே, நேற்று மாலை சேவல் சண்டை நடப்பதாக, பவானி போலீசா-ருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சென்றபோது சேவல் சண்டை நடப்பது தெரியவந்தது. அதில் ஈடுபட்டிருந்த கருக்குப்-பாளையம் தெற்குதெரு விக்னேஷ், 29, ராசு, 45, வினோத், 29, உட்பட பத்து பேரை கைது செய்தனர். இரண்டு சேவல் மற்றும் 3,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.