ADDED : ஜூன் 28, 2026 02:09 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோட்டில் நேற்று மாலை லேசான மழை, 15 நிமிடங்கள் மழை நீடித்தது. மழை பெய்தபோது பலத்த இடி, மின்னல் காணப்பட்டது.
ஈரோடு-பூந்துறை சாலையில் உள்ள ஒரு திரு-மண மண்டபத்தில் இருந்த இரு தென்னை மரங்-களில் இடி விழுந்து தீப்பிடித்து எரிந்தது. ஈரோடு தீயணைப்பு துறையினர் சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதேபோல் 46 புதுார் நல்லம்மா நகரில் இடி விழுந்து பனை மரம் தீப்பிடித்து எரிந்தது. அதையும் ஈரோடு தீயணைப்பு துறையினர் தண்-ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
