ADDED : செப் 25, 2025 02:15 AM
அ நிறம் | அளவு
காங்கேயம் :திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வெள்ளகோவில், வாணியம்பாடி, வடமதுரை, சாணார்பட்டி, பெரியதிருமங்கலம், பச்சாகவுண்டன்வலசு, முத்துார் பகுதி விவசாயிகள், 36 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தரம் பருப்பு அதிகபட்சமாக கிலோ, 230.68 ரூபாய், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 156.49 ரூபாய்க்கு ஏலம் பேனது. மொத்தம், 76 லட்சத்து, 61 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
