ADDED : மே 07, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
காங்கேயம், :திருப்பூர் மாவட்டம், வெள்ள கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வெள்ள
கோவில், விளாத்திகுளம். பாப்பம்பாளையம், பூலாவலசு, வாணியம்பாடி, மங்கலபட்டி, முத்துார் பகுதி விவசாயிகள், 31 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முதல் தர பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ, 145.69 ரூபாய், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 117.39 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 43 லட்சத்து, 23 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
