ADDED : செப் 20, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, செப். 20-
ஈரோடு, கஸ்பாபேட்டை, மேற்கு அண்ணா நகர், செல்லப்பம்பாளையத்தை சேர்ந்த கைலாசம் மகள் கனிஷ்கா, 18; தனியார் கல்லுாரி மாணவி. கடந்த, 14ம் தேதி காலை கல்லுாரிக்கு சென்றவர் அன்று மாலை வீடு திரும்பவில்லை.
கல்லுாரியில் விசாரித்த போது கல்லுாரிக்கே வராதது தெரிந்தது. அக்கம் பக்கம், தோழி, உறவினர்கள் வீடுகளில் தேடியும் தகவல் இல்லை. கைலாசம் புகாரின்படி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.