ADDED : மே 25, 2026 02:52 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு அவல்
பூந்துறை, பூ.சேமூர் புதுபாளையம் உப்புகிணறு பகுதியை சேர்ந்த
கோவிந்தராஜ் மகள் கவுசல்யா, 21; தனியார் கல்லுாரி மாணவி. தினமும்
கல்லுாரி வாகனத்தில் கல்லுாரி செல்வார். கடந்த, 23ல் இறுதி தேர்வு
நடந்தது.
மாலையில் தாய் சுமதிக்கு போன் செய்து, திருப்பூர் ஊதியூரை
சேர்ந்த மதன் என்பவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும், யாரும்
தேட வேண்டாம் என்று கூறி மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
தாய் சுமதி புகாரின்படி அறச்சலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
