ADDED : ஜன 01, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், ஜன. 1-
பவானிசாகர், மேட்டூர் அணை நீரை கொண்டு, அந்தியூர் வட்டாரத்தில் உள்ள ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும். பர்கூர்மலைவாழ் மக்களுக்கு எஸ்.டி., சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்தியூர் தாலுகா அலுவலகம் முன், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில், ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
தாலுகா செயலாளர் முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, தாலுகா கமிட்டி உறுப்பினர் பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

