நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயர், விதிமுறையை மாற்றிய மத்திய அரசை கண்டித்து, ஈரோடு வடக்கு மாவட்ட காங்., சார்பில், கோபியில் நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது.
தலைவர் சரவணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் மாரிமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், நல்ல-சாமி, செந்தில்குமார், உதயகுமரன், மாவட்ட இளைஞரணி தலைவர் பிரபாகர், தேசிய இளைஞர் காங்., செய்தி தொடர்பாளர் கோதண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

