sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

/

விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 15, 2024 10:57 AM

Google News

ADDED : பிப் 15, 2024 10:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலைவாசி உயர்ந்துள்ளது எனக்கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, அதிகப்படியான ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் பூஜைக்கு பயன்படுத்தப்படும் கற்பூரம், சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவை கூட ஜி.எஸ்.டி., விதித்து கடுமையாக விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பூண்டு, 600 ரூபாய்க்கு விற்கிறது.

ஒரே பொருளுக்கு உற்பத்தி முதல் விற்பனை வரை, 3 கட்டமாக, 4 கட்டமாக ஜி.எஸ்.டி., வரி விதிப்பதால் அப்பொருளின் விலை, சாமான்ய மக்கள் வாங்க முடியாதபடி உயர்ந்து வருகிறது. காலாவதியான டோல்கேட்களை அகற்ற வேண்டும். காஸ், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

மகளிர் காங்., மாவட்ட தலைவி தீபா தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட மகிளா காங்., தலைவி சிந்துஜா, கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராஜேந்திரன், ரவி, மண்டல தலைவர் விஜயபாஸ்கர், நிர்வாகிகள் மாரிமுத்து, அர்ஷத் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us