ADDED : ஆக 18, 2025 02:48 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி அண்ணா வீதியை சேர்ந்தவர் ராஜன், 61, கட்டட தொழிலாளி. பள்ளியூத்தில் கட்டட வேலை செய்தார். கடந்த, 16ம் தேதி மதியம் பள்ளியூத்து பகுதியில் கட்டட வேலை செய்யும் போது கால் வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார்.
ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து அறச்சலுார் போலீசார் விசாரிக்கின்றனர்,
