ADDED : அக் 07, 2025 01:35 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம் நேற்று நடந்தது.
இதில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது: நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக, தரமாக செயல்படுத்த வேண்டும். பண்டிகை காலமாக உள்ளதால், கோ ஆப்டெக்ஸ், ஆவின் நிறுவனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள், அவர்களது அடிப்படை பிரச்னைகள் குறித்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு பேசினார்.
