ADDED : டிச 13, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், டிச. 13-
தாராபுரம் நகராட்சி பகுதியில், நேற்று அதிகாலை, 5:30 மணி முதல் லேசான துாறல் மழை துவங்கியது. நேரம் செல்ல, செல்ல வேகம் கூடியது. அதன் பிறகு அவ்வப்போது இடைவெளி விட்டுவிட்டு, மாலை, 6:00 மணி வரை தொடர்ந்து பெய்தது.
இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெரிசலின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வணிக நிறுவனங்களில் வியாபாரம் சரிவை சந்தித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

