sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக பணியாளர் பணி புறக்கணிப்பு

/

கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக பணியாளர் பணி புறக்கணிப்பு

கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக பணியாளர் பணி புறக்கணிப்பு

கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக பணியாளர் பணி புறக்கணிப்பு


ADDED : டிச 31, 2024 06:59 AM

Google News

ADDED : டிச 31, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக பதிவறை எழுத்தர் ஐயப்பன் மீது, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின், ஈரோடு மாவட்ட கிளை சார்பாக, கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு கடந்த, 18ல் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் கிருஷ்ணதாஸ் அலுவலகத்துக்கு, மாவட்ட நிர்வாகிகள் சென்றனர்.

அப்போது புகாருக்குள்ளானவரை பாதுகாக்கும் நோக்கில், தங்களை மரியாதை குறைவாக, ஒருமையில் பேசினார் என்று, நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர்.அவர் மீது நடவடிக்கை கோரி, சென்னை தலைமை தணிக்கை இயக்குனர், கூட்டுறவு தணிக்கை இயக்குனருக்கு புகார் அனுப்பினர்.இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும், ஈரோடு கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக பணியாளர்கள், பணியை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை, கோரிக்கையை வலியுறுத்தினர்.

கிருஷ்ணதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் ஜன., ௨ம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் சங்க பணியாளர்கள், தணிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். பணி புறக்கணிப்பில் அலுவலக பணியாளர் மற்றும் நியாய விலை கடை ஊழியர், திருப்பூர், கோவை, சேலம் மாவட்ட சங்க நிர்வாகிகள் என, 760 பேர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us