/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கண்ணபுரம் சந்தையில் மாடு விற்பனை அமோகம்
/
கண்ணபுரம் சந்தையில் மாடு விற்பனை அமோகம்
ADDED : ஏப் 30, 2025 01:43 AM
காங்கேயம்::
காங்கேயம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓலப்பாளையம், கண்ணபுரத்தில் உள்ள விக்ரமசோழீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவை ஒட்டி, கடந்த, ௨௭ம் தேதி முதல் மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கால்நடைகள் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன.
திருப்பூர் மட்டுமின்றி புதுக்கோட்டை, திருவாரூர், திருச்சி, பெரம்பலுார் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் மக்கள் மாடு வாங்க வந்துள்ளனர். திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, பல்லடம், கோவை பகுதிகளிலிருந்து காங்கேயம் இன மாடுகள், காளைகள், கிடாரி கன்றுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இதுவரை, 3,௦௦௦ ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
ஆறு மாத இளங்கன்று, 25 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய்; நாட்டு பசுமாடு, 50 ஆயிரம் ரூபாய் முதல் 1.50 லட்சம் ரூபாய்; ஜோடி காளைகள், 80 ஆயிரம் முதல் 1.50 லட்சம் ரூபாய்; பூச்சி காளைகள், 1 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை விற்பனைக்கு வந்துள்ளன. மாடுகள் வாங்க வருவோரும், கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்துவோரும், விழா ஞாபகமாக சாட்டை வாங்கிச் செல்கின்றனர்.

