ADDED : மே 09, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, சித்தோடு அருகே நசியனுாரை சேர்ந்தவர் சின்னசாமி, 75; இவரின் இளையமகள் மேகலா, 41; இவரின் கணவர் பவானியை சேர்ந்த குமார்.
குழந்தை இல்லாததால் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். சற்று மனநலம் பாதித்த நிலையில் இருந்தவர் திடீரென மாயமாகி விட்டார். சின்னசாமி புகாரின்படி சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

