ADDED : மார் 31, 2025 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, சோலார், இரணியன் வீதியை சேர்ந்த பவுன்ராஜ்-நித்யா மகள் சன்மதி, 17; தனியார் கல்லுாரி மாணவி. கருத்து வேறு-பாட்டால் கணவன்-மனைவி தனித்து வாழ்கின்றனர்.
தாயுடன் சன்மதி வசித்தார். அடிக்கடி மொபைல்போனில் சன்மதி பேசி-யதை தாய் கண்டித்துள்ளார். கடந்த, 28ல் கல்லுாரி செல்லாமல் வீட்டிலிருந்தார். மகளை கண்டித்து விட்டு நித்யா பூக்கடை வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீடு வந்து பார்த்த-போது மகளை காணவில்லை. நித்யா புகாரின்படி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.