/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 10, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்ட நிர்வாகத்தை
கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஈரோடு, நவ. 10-
சட்ட விரோதமாக தொடர்ந்து சாயக்கழிவுகளை, இரவு நேரங்களில் வெளியேற்றி, காவிரி ஆற்றை மாசுபடுத்தி வரும், சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்காத, ஈரோடு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, சாமானிய மக்கள் நல கட்சி -மக்கள் உரிமை கூட்டணி சார்பில், ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் வளர்மதி, மாவட்ட துணை செயலாளர் ராமராஜன் மற்றும் நாமக்கல், திருச்சி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சாமானிய மக்கள் நல கட்சி பொது செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.