ADDED : அக் 06, 2024 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கான போராட்டத்தில் கைது நடவடிக்கை எடுத்த போலீசாரை கண்டித்தும், இந்திய கம்யூ., - மார்க் கம்யூ., - சி.பி.ஐ., எம்.எல்., சார்பில் ஈரோடு, சூரம்பட்டியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழனிசாமி, கோமதி, நகர செயலாளர் சுந்தரராஜன், தாலுகா செயலாளர் பாலசுப்பிரமணியன், கல்யாணசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.