ADDED : நவ 02, 2024 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: ஐப்பசி மாத அமாவாசை தினமான நேற்று, சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் காலை முதலே வரத் தொடங்கினர்.
கூட்டம் குவிந்-ததால், நீண்ட வரிசையில் காத்திருந்து, அம்மனை தரிசனம் செய்-தனர். பலர் குண்டத்தில் மிளகு, உப்பு துாவி வழிபட்டனர். காலை தொடங்கி மாலை வரை, ௫,௦௦௦க்கும் மேற்பட்ட பக்-தர்கள் வந்து சென்றனர். வேண்டுதல் நிறைவேறிய பலர், மக்க-ளுக்கு அன்னதானம் வழங்கினர். போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.

