ADDED : ஆக 25, 2026 05:40 AM
அ நிறம் | அளவு
கோபி; தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனா-ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், கோபி ஆர்.டி.ஓ., ஆபீஸ் முன், கோரிக்கையை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்-பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
கோபி தாலுகா செயலாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாரி-முத்து, கவுரவ ஆலோசகர் பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்-தொகை, 6,000 ரூபாயாக உயர்த்தி உடனே வழங்க வேண்டும். இரு ஆண்டுகளுக்கு மேலாக உதவித்-தொகைக்கு விண்ணப்பித்து காத்திருப்போ-ருக்கும் வழங்க வேண்டும் எனக்கூறி ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர்.
