ADDED : மார் 09, 2026 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில், 67 மாற்று திறனாளிக-ளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க, 2023ல் அர-சாணை வெளியிடப்பட்டது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்குவதாக அரசு அறிவித்தது.
இதில் திட்ட பயனாளிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட மாற்று திறனுடையோர் நல சங்க தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் நவ-நீத கிருஷ்ணன், பகுதி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், திட்ட பொறுப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். இத்திட்டத்தில், 3.50 லட்சம் ரூபாயை, தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வழங்க, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

