ADDED : ஆக 12, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில், விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் கந்தசாமி தலைமையில் மாணவ, மாணவியர் ஏற்றனர். பின், மாணவ, மாணவியருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட, 1.௧௦ லட்சம் குழந்தைகளுக்கு, 2,080 அங்கன்வாடி மையங்கள்; ஆறு முதல் 19 வயது வரை, 5.௨௮ லட்சம் பேருக்கு பள்ளிகள்; 20 முதல் 30 வயது பெண்கள், 1.75 லட்சம் பேருக்கு அங்கன்வாடி, துணை சுகாதார நிலையங்கள் மூலம் வழங்கப்படவுள்ளது. மொத்தம், 9.௦௧ லட்சம் பேருக்கு மாத்திரை வழங்கப்பட உள்ளது. இச்சுற்றில் விடுபட்டவர்களுக்கு வரும், 18ல் மாத்திரை வழங்கப்படும்.