/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திடக்கழிவு மேலாண்மை திட்டம் மாவட்ட நிர்வாகம் அறிவுரை
/
திடக்கழிவு மேலாண்மை திட்டம் மாவட்ட நிர்வாகம் அறிவுரை
திடக்கழிவு மேலாண்மை திட்டம் மாவட்ட நிர்வாகம் அறிவுரை
திடக்கழிவு மேலாண்மை திட்டம் மாவட்ட நிர்வாகம் அறிவுரை
ADDED : மார் 02, 2026 05:36 AM
ஈரோடு; கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த, ஈரோடு மாவட்ட நிர்-வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக கிராமங்களின் துாய்மையை மேம்படுத்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்-பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 225 ஊராட்சிகளில், தலா ஒரு இடத்தில் மண்புழு உரக்கூடம், குப்பையை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெருவாரி-யான இடங்களில் இவை செயல்படாமல் மதுப்பி-ரியர் கூடாரமாகவும், காட்சி பொருளாகவும் மாறியிருக்கின்றன. பல இடங்களில் முழுவதும் சிதைந்து போயிருக்கின்றன. குப்பைகளை சேக-ரித்து செல்லும் துாய்மை காவலர்கள் தரம் பிரிக்-காமல் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் கொட்டி எரித்து விடுகின்றனர். மக்கும் குப்பை மூலம் மண்புழு உரம் தயாரித்தல், மக்காத குப்பையை மறு சுழற்சிக்கு அனுப்புவது கேள்விக்குறியாகி வருகிறது, இதுபற்றி புகார் எழுந்த வண்ணம் உள்-ளது. இந்நிலையில் கிராம ஊராட்சிகளில் திடக்க-ழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் சூர்யா கூறியதாவது: ஊராட்சிகளில் குடியிருப்பு பகுதிகளில் சேகரமாகும் குப்பை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை உரக்கிடங்கிலும், மக்காத குப்பை கிடங்குகளிலும் சேகரிக்கப்பட்டு, சிமெண்ட் தயா-ரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் குப்பை தீ வைத்து எரிக்கப்படுவ-தாக புகார் உள்ளது. எனவே ஊராட்சிகளில் திடக்
கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதிய திட்டத்தை ஒவ்வொரு ஊராட்சியிலும் செயல்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

