/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணியில் வட்டார கல்வி அலுவலர்கள்
/
ஈரோடு மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணியில் வட்டார கல்வி அலுவலர்கள்
ஈரோடு மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணியில் வட்டார கல்வி அலுவலர்கள்
ஈரோடு மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணியில் வட்டார கல்வி அலுவலர்கள்
ADDED : அக் 30, 2025 02:03 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியில், வட்டார கல்வி அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.
தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி என்ற எஸ்.ஐ.ஆர்., நடக்க உள்ளது. வரும், 4ல் துவங்கி டிச.,4 வரை பூத் லெவல் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு படிவத்தை கொடுப்பர். அதை நிரப்பி பொதுமக்கள் திருப்பி தர வேண்டும். டிச.,9ல் வரைவு வாக்காளர் பட்டியல், பிப்.,7ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இதுபற்றி பள்ளி கல்வி துறையினர் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில், 14 வட்டாரங்களிலும் உள்ள வட்டார கல்வி அலுவலர்கள், 22 பேர் இப்பணியில் ஈடுபடுவர். தினமும் கல்வி வளர்ச்சி பணியுடன் சேர்ந்து, எஸ்.ஐ.ஆர்., பணிகளையும் மேற்கொள்வர். இதற்கென தனியாக நேரம் ஒதுக்கப்படவில்லை. இப்பணியில் அங்கன்வாடி பணியாளர்களும் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு கூறினர்.

