sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம்

/

மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம்

மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம்

மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம்


ADDED : மே 10, 2024 07:03 AM

Google News

ADDED : மே 10, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக, அனைத்து துறை அலுவலர்களுடனான, மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். இதில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணி குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பேரூராட்சிகள் துறை சார்பில் நிலுவை பணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதிய துணை சுகாதார நிலையங்கள் அமைத்தல், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பில் தாளவாடியில் மூலிகை பண்ணை அமைத்தல், தொழிலாளர் நலத்துறை சார்பில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கான வீட்டு வசதி திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அரசின் உரிமை வழங்குதல், அங்கன்வாடி கட்டடங்களில் கழிப்பிட வசதி அமைத்து தருதல், பர்கூர் துணை ஒழுங்குழுறை விற்பனை கூடத்துக்கு அணுகுசாலை அமைத்தல், நெடுஞ்சாலைத்துறை சார்பில் நான்குவழி சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் நிலை குறித்து அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைவில் முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார். கூடுதல் கலெக்டர் மணீஷ், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, டி.ஆர்.ஓ., சாந்தகுமார், ஆவின் பொது மேலாளர் கவிதா உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us