sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொலைபேசி எண்ணை குறிப்பிடாமல் ரகசியம் காக்கும் மாவட்ட சிறை நிர்வாகம்

/

தொலைபேசி எண்ணை குறிப்பிடாமல் ரகசியம் காக்கும் மாவட்ட சிறை நிர்வாகம்

தொலைபேசி எண்ணை குறிப்பிடாமல் ரகசியம் காக்கும் மாவட்ட சிறை நிர்வாகம்

தொலைபேசி எண்ணை குறிப்பிடாமல் ரகசியம் காக்கும் மாவட்ட சிறை நிர்வாகம்


ADDED : ஜூன் 17, 2025 02:09 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கோபி அருகே கச்சேரிமேட்டில், அரசு மருத்துவமனை சாலையில், ஈரோடு மாவட்ட சிறை இயங்குகிறது. இங்கு பத்து அறைகளில், தலா, 20 பேர் என, 200 பேரை அடைக்கலாம். நீதிமன்ற காவலில் உள்ள சிறைவாசிகள் மட்டுமே அடைக்கப்படுகின்றனர். நேற்றைய நிலவரப்படி, 179 பேர் அடைக்கப்பட்டிருந்தனர்.

மாவட்ட சிறையை தொடர்பு கொள்ள, 04285-221077 என்ற தொலைபேசி எண் பயன்பாட்டில் இருந்தது. கடந்த சில மாதங்களாகவே இந்த எண் பயன்பாட்டில் இல்லை. அதேசமயம் மாவட்ட சிறை பிரதான சுவரில் எழுதப்பட்டிருந்த, அந்த லேண்ட் லைன் எண்ணும் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட சிறையை தொடர்பு, பொதுமக்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து சிறைத்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், 'பழைய லேண்ட்லைன் எண்ணுக்கு பதிலாக, 04285-221076 என்ற எண் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பழைய எண்ணை அழித்துள்ளோம். புதிய எண் எழுதி வைக்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us