ADDED : அக் 09, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., மகளிரணி ஆலோசனை
காங்கேயம், அக். 9-
தி.மு.க., மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டம், காங்கேயத்தில் நேற்று நடந்தது. காங்கேயம் தெற்கு, வடக்கு ஒன்றியம், நகரம், குண்டடம் கிழக்கு ஒன்றிய மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமை வகித்தார். மாநில மகளிரணி துணை செயலாளர் மாலதி முன்னிலை வகித்தார்.
மகளிரணி நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது. தி.மு.க., தெற்கு மாவட்ட மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி, காங்கேயம் தெற்கு, வடக்கு, நகர நிர்வாகிகள், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.