sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெருந்துறை நகராட்சியானதற்கு தி.மு.க.,வில் எதிர்ப்பு

/

பெருந்துறை நகராட்சியானதற்கு தி.மு.க.,வில் எதிர்ப்பு

பெருந்துறை நகராட்சியானதற்கு தி.மு.க.,வில் எதிர்ப்பு

பெருந்துறை நகராட்சியானதற்கு தி.மு.க.,வில் எதிர்ப்பு


ADDED : ஜன 03, 2025 01:26 AM

Google News

ADDED : ஜன 03, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஜன. 3-

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தியதற்கு, தி.மு.க., உட்பட கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், 10 பேர் எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் முத்துசாமியிடம் நேற்று மனு வழங்கினர்.

அமைச்சரிடம் மனு வழங்கிய தி.மு.க., கவுன்சிலர்களில் ஒருவரான சுப்பிரமணியம் கூறியதாவது: சாலையின் ஒரு புறம் பெருந்துறை, மறுபுறம் கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்., என உள்ளது. பெருந்துறையை தற்போது நகராட்சியாக அறிவித்தால், வரி உயரும். புதிய திட்டங்கள் கிடைக்கும்.

கடந்த, 2022 முதல் அரசின் அனுமதிக்காக நாங்கள் அனுப்பிய திட்டங்கள் கிடைக்காமல் நின்று போகும். 10 மீட்டருக்கு அப்பால் உள்ளவர்களுக்கு வரி குறைவு. அவர்களுக்கு திட்டங்களை தர முடியாது. அதிருப்திதான் ஏற்படும்.

பெருந்துறை டவுன் பஞ்.,ல் தேவையான அளவு சாலை, கட்டடம், ரவுண்டானா, பஸ் ஸ்டாண்ட், கூட்டு குடிநீர் திட்டம், நவீன மின்மயானம், பாதாள சாக்கடை திட்டம், நீதிமன்றம் உட்பட அனைத்து அலுவலகமும் சொந்த கட்டடம் என திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். மக்கள் தொகையும், பொது நிதியும் எங்களுக்கு அதிகம். நகராட்சியானால் அதிக நிதி கிடைக்கும் என்பதற்காக, ஆதரவு - எதிர்ப்பை காட்டவில்லை.

வரும், 2026ல் சட்டசபை தேர்தல் வரும்போது, பெருந்துறை தொகுதிக்குள் பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்.,கள் அமைந்து, இரு இடங்களிலும் வேறுபாடு வந்தால், மக்களிடம் எப்படி செல்ல முடியும். இதை இரு மாதத்துக்கு முன்பே எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினோம்.

இந்த அறிவிப்பை, அனைத்து தரப்பினரும் எதிர்க்கின்றனர். டவுன் பஞ்.,ல் உள்ள, 15 கவுன்சிலர்களில், தி.மு.க., கூட்டணியில் உள்ள, 10 கவுன்சிலர்களும் எதிர்க்கிறோம். தி.மு.க.,வுக்கு கெட்ட பெயர் வரட்டும் என அ.தி.மு.க., ஆதரிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us