/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எஸ்.ஐ.ஆரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
எஸ்.ஐ.ஆரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 09, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், வீட்டு வசதித்துறை
அமைச்சருமான முத்துசாமி, வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
தமிழகத்தில்
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு, தேர்தல் ஆணையத்தால்
நடத்தப்படுகிறது. பணியை கைவிடக்கோரியும், பா.ஜ., அரசின்
கைப்பாவையாக மாறி வரும் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் வரும், 11ம்
தேதி காலை, 10:00 மணிக்கு, ஈரோடு, காளை மாட்டு சிலை அருகே சிம்னி ேஹாட்டல்
அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்நிகழ்வில் மத சார்பற்ற
முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், அனைத்து நிலை நிர்வாகிகள்,
தொண்டர்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

