/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ஓட்டு கேட்டு வராதீர்'; பிளக்ஸ் வைத்து எதிர்ப்பு
/
'ஓட்டு கேட்டு வராதீர்'; பிளக்ஸ் வைத்து எதிர்ப்பு
ADDED : பிப் 21, 2026 09:15 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 20வது வார்டு மற்றும் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட, குமலன்குட்டை, செல்வம் நகர் பகுதியில், 35 ஆண்டுக்கு முன் அரசுக்கு தானமாக வழங்கிய பூங்கா பகுதியை தனி நபர் ஆக்கிரமித்துள்ளார்.
இதை மீட்க கோரி கலெக்டர், எம்.எல்.ஏ., அமைச்சர், கவுன்சிலர் என அனைவரிடமும், மக்கள் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. மேலும் இங்கு வசிக்கும், 700க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நீண்ட கால கோரிக்கையாக, பாதாள சாக்கடை திட்ட வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவு நீர் வெளியேற வழி செய்ய வேண்டும் என்பதாக உள்ளது. நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி உத்தரவு பெற்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்பது, மக்களின் குமுறலாக உள்ளது. இதனால் தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கேட்டு இப்பகுதிக்கு வர வேண்டாம் எனக்கோரி, நேற்று பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர்

