/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலையில் குடிநீர் சப்ளை 'கட்'
/
சென்னிமலையில் குடிநீர் சப்ளை 'கட்'
ADDED : ஜூன் 21, 2024 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை : சென்னிமலை பேரூராட்சியில் உள்ள, 15 வார்டுகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது, 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் நடக்கிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் இருந்து வரும் பிரதான குடிநீர் குழாயில், சென்னிமலை-அம்மாபாளையம் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னிமலை பகுதியில் மூன்று நாட்களுக்கு எந்த பகுதியிலும் குடிநீர் வினியோகம் செய்ய முடியாது என, பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.