/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின்சாரம் தாக்கி டிரைவர் உயிரிழப்பு
/
மின்சாரம் தாக்கி டிரைவர் உயிரிழப்பு
ADDED : டிச 28, 2024 02:38 AM
கோபி: கோபி அருகே, மின்சாரம் தாக்கி டிரைவர் இறந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்தவர் ராம்கி, 34, டிரைவர்; இவர் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் உள் வளாகத்தில், வாகனம் கழுவும் இடத்தில் மின்சாரம் தாக்கி கிடப்-பதாக, நேற்று முன்தினம் இரவு, 7:45 மணிக்கு அவரது குடும்பத்-தாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த அவரது குடும்பத்தார், சம்பவ இடத்துக்கு விரைந்து ராம்கியை மீட்டு கோபி அரசு மருத்-துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியி-லேயே அவர் இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி நிரோஷா, 33, கொடுத்த புகார்-படி, ராம்கி எவ்வாறு மின்சாரம் தாக்கி இறந்தார் என, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

