ADDED : ஆக 20, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:கவுந்தப்பாடி
அருகே உப்புப்பள்ளத்தை சேர்ந்த ரங்கம்மாள் மகன் ஸ்ரீபத்மநாபன், 43,
டிரைவர். கடந்த 2 ஆண்டுகளாக தனது தாயுடன், அந்தியூர் தாலுகா அலுவலகம்
எதிரில் வாடகை அறையில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, 11:30
மணிக்கு அந்தியூர் குருநாத சுவாமி வனக் கோவிலுக்கு சென்று விட்டு,
ஹீரோ ப்ளஷர் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தார். தண்ணீர்பந்தல்
பிரிவு அருகே வந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரை மீட்டு
அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த
டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அந்தியூர்
போலீசார் விசாரித்து வருகின்றனர்.
