ADDED : செப் 07, 2024 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த ஆர்.கே.ஆர்.நகரை சேர்ந்த டிரைவர் செந்-தில்குமார், 54; இவரது மனைவி ஜெயலட்சுமி, 48, தனியார் பள்ளி ஆசிரியை. ஜெயலட்சுமி நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற நிலையில், செந்தில்குமார் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. யாரும் பார்க்தாததால் அப்படியே விழுந்து விட்டார். மாலையில் வேலை முடிந்து வந்த ஜெயலட்சுமி, கணவர் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது கூச்சல் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தனர். செந்தில்குமாரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.