ADDED : மார் 05, 2026 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி அடுத்த கோவில்கரடு பகுதியை சேர்ந்தவர் டிரைவர் சிவக்குமார், 52. இவருக்கு மனைவி உட்பட இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர், எலக்ட்டிரிக் ஸ்கூட்டியில் நேற்று மாலை, 4:00 மணியளவில் குருவரெட்டியூர், ஆணை
கவுண்டனுார் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே, சென்னம்பட்டியில் இருந்து ஈரோடு சென்று கொண்டிருந்த அரசு பஸ் சிவக்குமார் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சிவக்குமார் இறந்தார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

