ADDED : மே 22, 2026 05:37 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம் :கோபியிலிருந்து நேற்று முன் தினம் இரவு சத்தியமங்கலத்துக்கு ஒரு அரசு மொபசல் பஸ், 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. கோபியை சேர்ந்த முருகபிரசாத், 46, ஓட்டினார்.
சத்தியமங்கலம் அருகே பெரியூர் பிரிவு என்ற இடத்தில், டிரைவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த வித காயமும்
ஏற்படவில்லை.டிரைவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோபி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
