ADDED : பிப் 02, 2026 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானிசாகர்; பவானிசாகரை அடுத்த அக்கரை தத்தப்பள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., அதிகாரி சுப்பிரமணியம் மகன் ரஞ்சித்குமார், 45; சேலத்தில் குடும்பத்துடன் தங்கி, மருந்து விற்-பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த மாதம், 12ம் தேதி குடும்பத்துடன் பவானி-சாகருக்கு சென்றார். மனைவி, இரண்டு பெண் குழந்தைகளை அவரது பெற்றோர் வீட்டில்விட்டுவர சென்றவர் மீண்டும் வீடு திரும்ப-வில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தந்தைபுகாரின்படி பவானிசாகர் போலீசார் தேடி
வருகின்றனர்.

