/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதையில் போக்குவரத்து போலீஸ்காரர் அலப்பறை
/
போதையில் போக்குவரத்து போலீஸ்காரர் அலப்பறை
ADDED : ஜன 09, 2026 05:06 AM
ஈரோடு: ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் எஸ்.எஸ்.ஐ., பிரபு. பாரியூர் கொண்டத்து காளி-யம்மன் கோவில் விழா பாதுகாப்பு பணி வழங்கப்
பட்டது.
இதற்காக சென்றவர், 7ம் தேதி இரவு, பைக்கில் கோபி-சத்தி சாலை பாரியூர் பிரிவுக்கு சென்றபோது, குடிபோதையில் இருந்-ததால், தடுமாறி டிவைடரில் மோதி விழுந்தார். அங்கிருந்த-வர்கள் துாக்கி விட்ட நிலையில், பணிக்கு செல்லாமல் கோபி- ஈ-ரோடு சாலையில் ராங் ரூட்டில் சென்று மொபட்டில் சென்ற முதி-யவர் மீது மோதியுள்ளார். அதன் பிறகும் நிற்காமல் சென்றவர் டிவைடரில் மோதி பைக்-குடன் விழுந்தார். சீருடையில் இருந்ததால் அங்கிருந்தோர், ஆம்புலன்சை வரவழைத்து கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர், மருத்துவ பணியாளர்க-ளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக மருத்துவ சோதனையில், பிரபு மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. பிரபுவின் அலப்பறை குறித்த வீடியோ ஆதாரமும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்றுள்-ளது. இந்நிலையில் பிரபுவை, ஈரோடு ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, ஈரோடு எஸ்.பி., சுஜாதா நேற்று இரவு உத்தரவிட்டுள்ளார்.

