ADDED : ஏப் 26, 2025 01:15 AM
அ நிறம் | அளவு
கோபி:திங்களூர் அருகே கிரே நகரில், கனிம வளத்துறையினர் நேற்று முன்தினம் மாலை, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஒரு டிப்பர் லாரியை நிறுத்த முயன்றபோது, சற்று முன்னதாக நிறுத்திவிட்டு டிரைவர் ஓட்டம் பிடித்து விட்டார்.
லாரியை சோதனை செய்தபோது, மூன்று யூனிட் கருங்கல் இருந்தது. இதுகுறித்த புகாரின்படி திங்களூர் போலீசார் விசாரிக்கின்றனர். கருங்கற்களுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, திங்களூர் போலீசில் ஒப்படைத்தனர்.
