/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
/
பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : ஜூலை 16, 2025 01:24 AM
ஈரோடு, பிளஸ் ௨ முடித்து பொறியியல் படிப்பில் சேர ஆர்வமுள்ள மாணவர்களுக்கான, கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, கோபி ஸ்ரீவெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக கல்லுாரி செயலாளரும், பவானி எம்.எல்.ஏ., வுமான கருப்பணன் கலந்து கொண்டு பேசினார். கல்லுாரி முதல்வர்
தங்கவேல் வரவேற்றார். கல்லுாரி தலைவர் வெங்கடாசலம், இணை செயலாளர் கெட்டிமுத்து, அறங்காவலர் கவியரசு, தலைமை நிர்வாக அதிகாரி கெளதம், துணை முதல்வர் பிரகாசம், தேர்வு கட்டுப்பாடு
அதிகாரி அருண்ராஜா, துறை தலைவர்கள் ஆகியோர் தொழிற் கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். விழாவில் பேராசிரியர்கள், 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.