ADDED : ஆக 12, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே போடிசின்னாம்பாளையத்தை சேர்ந்தவர் கன்னியம்மாள், 60; நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு அதே பகுதியில் சாலையை நடந்து கடக்க முயன்றார்.
அப்போது எதிரே வந்த டிராவல்ஸ் வேன் மோதியதில் பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரின் மகன் ஈஸ்வரன் புகாரின்படி, வேன் டிரைவரான தர்மபுரியை சேர்ந்த பழனிவேல், 37, மீது, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.