/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
/
கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
ADDED : ஆக 09, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம், டி.என்.பாளையம் அருகே, வாணிப்புத்துார் பறையன் தோட்டத்தை சேர்ந்தவர் கருப்பாயாள், 80. கணவர் பெரியசாமி, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பெரியசாமி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்,
இந்நிலையில், நேற்று மதியத்துக்கு மேல் அருகிலுள்ள, 60 அடி கிணற்றில் கருப்பாயாள் தவறி விழுந்துள்ளார். கோபி தீயணைப்பு வீரர்கள், கருப்பாயாளை சடலமாக மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பங்களாப்புதுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,

