sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தேர்தல் ஆணைய இயக்குனர் திருப்பூரில் 'மின்னல்' வேக ஆய்வு

/

தேர்தல் ஆணைய இயக்குனர் திருப்பூரில் 'மின்னல்' வேக ஆய்வு

தேர்தல் ஆணைய இயக்குனர் திருப்பூரில் 'மின்னல்' வேக ஆய்வு

தேர்தல் ஆணைய இயக்குனர் திருப்பூரில் 'மின்னல்' வேக ஆய்வு


ADDED : நவ 26, 2025 01:34 AM

Google News

ADDED : நவ 26, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், இந்திய தேர்தல் ஆணைய இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி, திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்ட சபை தொகுதிகளிலும், நேற்று மின்னல் வேகத்தில் ஆய்வு நடத்தினார்.

திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளர் உள்ளனர். தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, கடந்த நவ. 4ம் தேதி முதல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. 2,536 பி.எல்.ஓ.,க்கள், வாக்காளர்களின் வீடு தேடிச் சென்று, தீவிர திருத்த படிவங்கள் வழங்கினர்.

தேர்தல் பிரிவினருக்கு பக்கபலமாக, வருவாய்த் துறை, மாநகராட்சி, நகராட்சி, கூட்டுறவு, வேளாண், தோட்டக்கலைத்துறை உள்பட மற்ற அரசு துறையினரும், வாக்காளர்களின் படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட தீவிர திருத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தீவிர திருத்த பணிகள் தொடர்பாக, இந்திய தேர்தல் கமிஷன் இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி, நேற்று ஆய்வு நடத்தினார்.

முதலாவதாக அவிநாசிக்கு சென்ற அவர், தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றுவரும், தீவிர திருத்த படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள்; முனியப்பன் கோவில் வீதி மற்றும் வடக்கு ரத வீதி பகுதிகளில், பி.எல்.ஓ.,க்கள், வாக்காளர் வீடு தேடிச் சென்று, பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெறும் பணிகளை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, திருப்பூர் வடக்கு தொகுதியில், ஸ்ரீபதி நகர், 15 வேலம் பாளையம், அமர்ஜோதி கார்டனில், பி.எல்.ஓ.,க்களின் களப்பணிகளை ஆய்வு செய்தார். மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்ற இயக்குனர், ஆன்லைன் பதிவேற்ற பணிகளை பார்வையிட்டார்.

பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் தொகுதி

களுக்கு சென்று, பணிகளை ஆய்வு செய்தார். கலெக்டர் மனிஷ் நாரணவரே, மாநகராட்சி கமிஷனர் அமித், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us