தேர்தல் பறக்கும் படையால் ரூ.80,000 மட்டும் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படையால் ரூ.80,000 மட்டும் பறிமுதல்
ADDED : ஏப் 02, 2026 04:18 AM
அ நிறம் | அளவு
ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதிகளில் நேற்று முன்தினம் வரை, 1.35 கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்திருந்தனர். நேற்று பெருந்துறை தொகுதியில், 80,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இத்துடன் சேர்த்து, 1 கோடியே, 36 லட்சத்து, 67,210 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை வழங்கியதன் அடிப்படையில், 1 கோடியே, 32 லட்சத்து, 710 ரூபாயை திரும்ப ஒப்படைத்தனர். மீதமுள்ள, 4 லட்சத்து, 66,500 ரூபாயை கருவூலத்தில் செலுத்தி உள்ளனர்.
