ADDED : மே 04, 2026 03:39 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானி
அருகே ஜம்பையை சேர்ந்த எலக்ட்ரீஷியன் குமரேசன், 56; மனைவி, ஒரு மகள்
உள்ளனர். இரட்டை கரடு அருகே வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம்
மாலை கட்டடத்துக்கு தண்ணீர் விட சென்றார்.
அப்போது இரும்பு
குழாயில் போடப்பட்டுள்ள லைட்டுடன் உள்ள கம்பி மீது சாய்ந்துள்ளார்.
அதில் பாய்ந்த மின்சாரம் அவர் மீது பாய்ந்ததில் மயங்கி விழுந்தார். பவானி
அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே இறந்து
விட்டது தெரிய வந்தது.
