ADDED : மார் 01, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தி:சத்தியமங்கலத்தை
அடுத்த கொண்டப்பநாயக்கன் பாளையம் வனப்பகுதியில், ஒரு ஆண் யானை
இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வனச்சரகர்
பழனிச்சாமி, கால்நடை மருத்துவர் சதாசிவம் மற்றும் வனத்துறையினர்
சென்றனர். இறந்த யானைக்கு, 13 வயது இருக்கலாம். குடற்புழு நோய்
தாக்கத்தால் இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

